top of page

செவ்வாய், ஆகஸ்ட் 05 || தேவனே தினமும் உம்முடன் ஒவ்வொரு நொடியும் நடக்க உதவும்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Aug 5
  • 1 min read

வாசிக்க: எபிரெயர் 11: 5,6


ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற் போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

- ஆதியாகமம் 5:24


நடப்பது என்றால் குறிப்பிட்ட காலம் ஒரே திசையில் சிறு சிறு அடிகளாய் எடுத்துவைப்பது என்று கூறலாம். அவனது குமாரன் மெத்துசலா பிறந்த பின் ஏனோக்கு 300 வருடங்கள் தேவனோடு நடந்தான். ஒருவரோடு நடக்கவேண்டும் என்றால் அதற்கு அநேக காரியங்கள் வேண்டும்.

முதலாவது, இருவரும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் இருக்கவேண்டும்.

இரண்டாவது, இருவரும் ஒரே திசையில் செல்லவேண்டும்.

மூன்றாவது, ஒரே வேகத்தில் இருவரும் நடக்கவேண்டும்.

ஒன்றாய் நடக்க வேண்டும் என்றால் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒரே திசையில் போக இருவருக்குமிடையே ஒரு உடன்படிக்கை வேண்டும்.


ஏனோக்கு தேவனோடு நடக்கவேண்டுமென்றால், அவன் ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன், ஆண்டவரே, இன்று நான் எங்கு போகவேண்டுமென்று விரும்புகிறீர்? என்று கேட்க வேண்டும். தேவன் எங்கெங்கு போகிறாரோ அங்கெல்லாம் அவன் செல்லவேண்டும். தேவனோடு அவர் பக்கத்தில் இருந்து, அவர் நடக்கும் வேகத்தில் நாள் முழுவதும் தானும் நடக்கவேண்டும். அப்படியே நாள்தோறும், வாரந்தோறும், வருடந்தோறும் அவன் செய்துவந்தான். அதற்குக் காரணம், ஆண்டவரைப் பின்பற்றிவர அவன் தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தி இருந்தபடியால், அவரோடு நடப்பதே அவனுடைய வாழ்வின் அங்கமாயிற்று. கர்த்தர் நேசிப்பதை நேசிக்கவும், கர்த்தர் வெறுப்பதை வெறுக்கவும் தொடங்கினான். அதைக்காட்டிலும் சுவாரசியமானது, ஏனோக்கின்மேல் தேவன் பிரியம் வைத்தார். (எபிரெயர் 11:5) ஒருநாள், ஏனோக்கு, நாம் வெகு தூரம் ஒன்றாக நடந்து வந்துவிட்டோம். நீ ஏன் என் வீட்டிற்கு வந்து என்னுடன் தங்கக்கூடாது? என தேவன் சொல்லியிருக்கக் கூடும்.


 	அன்பானவர்களே, தேவனோடு நடக்க விரும்பினால், நாம் அவருக்கு முன்னே போகாமல், அல்லது பின்தங்கிவிடாமல், அவர் கூட நடக்கிறோம், வழியிலே தேவனுடன் பேசுகிறோம், அவர் பேச்சைக் கேட்கிறோம், பிரசன்னத்தை அனுபவிக்கிறோம். நமக்கு முன்னே இருப்பதை நாம் அறியாதிருந்தாலும், அவரது நடத்துதலில் நம்பிக்கை வைக்கிறோம். என்ன ஒரு பாக்கியம்! சிருஷ்டிகரும், மீட்பரும், ஆண்டவருமாகிய தேவன், தம்மோடு நடக்க விரும்புகிற, தம் நட்பை நாடுகிற மக்களைத் தேடுகிறார். நாம் அவரை அப்படி நாடுகிறோமா?   

ஜெபம்: ஆண்டவரே, உம்மோடுகூட அனுதினமும் நடக்கும்படி நான் அர்ப்பணிக்க எனக்கு உதவும். என் கரத்தை உம் கரத்தில் கொடுத்து நான் உம் அருகிலே நடக்க எனக்கு உதவும். என் எண்ணங்களை நான் உம்மிடமும், உம் எண்ணங்களை நீர் என்னிடம் பகிர்ந்துகொள்வோமாக. என் பெலத்தினாலல்ல, உமது பெலத்தினால் நடப்பதின் சந்தோஷத்தை நான் அனுபவிக்க உதவும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page