top of page

புதன், அக்டோபர் 15 || சகல ஆறுதலின் தேவன்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • 3 days ago
  • 1 min read

தெளிதேன் துளிகள் வாசிக்க: 2 கொரிந்தியர் 1: 3-7


நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.  - 2 கொரிந்தியர் 1:3



இரக்கங்களின் பிதாவை, சகலவிதமான ஆறுதலின் தேவன் என்று தான் அழைக்கும் ஆண்டவரை மனதார ஸ்தோத்தரித்து, பவுல் இந்த நிருபத்தைத் துவக்குகிறான். பவுல் இந்த சத்தியத்தை வெறும் வார்த்தைகளால் அல்ல, தனது அனுபவத்தில் அறிந்திருந்தான். அவன் பலவிதப் பாடுகள், சிறைவாசங்கள், துன்புறுத்துதல்கள் மற்றும் சோதனைகளைத் தாங்கினான். எனினும், ஆண்டவரை என்றைக்கும் மாறாத பெலனையும் உற்சாகத்தையும் தரும் ஆதாரமாக அவன் கண்டுகொண்டான். இதே அதிகாரத்தில், ஆசியாவில் தனக்கு நேரிட்ட உபத்திரவத்தையும், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக தன் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் தனக்கு உண்டானதையும் குறிப்பிடுகிற அவன், அந்த நேரங்களில் தேவனுடைய ஆறுதல் தன்னைத் தாங்கினதைக் கண்டறிந்தான். ஏசாயா 66:13ல், ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன் என்று ஆண்டவர் கூறுகிறார். அவர் தரும் ஆறுதலானது ஏதோ தற்காலிகமான துயர்துடைப்பு இல்லை. அது நம் துயரத்தின் நேரங்களில் நம்மைத் தாங்கி, நாம் பாரம் சுமக்கும்போது நம்மைத் தூக்கி நிறுத்தும் அவரது நீங்காத பிரசன்னமே.

 

அன்பானவர்களே, நாம் தேவனிடமிருந்து பெறும் ஆறுதல் நாமே வைத்துக்கொள்வதற்கு அல்ல. உபத்திரவங்களில் அகப்படுகிறவர்களுக்கு ஆறுதல்செய்ய திராணியுள்ளவர்களாய் இருக்கும்படிக்கே நாம் ஆறுதல் பண்ணப்படுகிறோம் என்று பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறான். தேவன் நம் காயங்களை கட்டி, நம் விசுவாசத்தை உறுதிப்படுத்தி, நம் இருதயங்களை பலப்படுத்துவது - உபத்திரவங்களில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கே. இதற்கு அவர் நம்மை ஆயத்தப்படுத்துகிறார். இப்படி தேவனால் ஆறுதலைப் பெற்ற நாம் அதே ஆறுதலை மற்றவர்களுக்கு அளிப்பது, கிருபை என்பது ஒரு சக்கரத்தைப் போல சுழன்றுவருவதை அழகாகக் காட்டுகிறது. எனவே, தேவனிடமிருந்து நாம் பெற்ற இந்த ஆறுதலை நமக்காகவே வைத்துக்கொள்ளாமல், பாடுகளில் உள்ளவர்களிடத்திலும் தாராளமாகப் பகிர்ந்தளிப்போம்.

ஜெபம்: அன்புள்ள பிதாவே, நீர் சகல ஆறுதலின் தேவனாக இருக்கிறபடியால் உமக்கு நன்றி. என் இதயம் நொறுங்கி என் பெலன் குன்றியபோது நீர் உமது வார்த்தையாலும், உமது ஆவியாலும் என்னைத் தேற்றினீர். உம்மிடத்தில் இருந்து பெற்ற ஆறுதல், கஷ்டப்படுகிறவர்கள், தேவையுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்படும்படி என் மூலம் அவர்களுக்குப் பாய்ந்துசெல்லட்டும்.  இயேசுவின் நாமத்தில். ஆமென்

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page