top of page

திங்கள், ஜூலை 07 || தேவனை மகிமைப்படுத்தும் பெரிய விசுவாசம் நமக்கு தேவை

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jul 7
  • 1 min read

வாசிக்க: மாற்கு 10: 46-52


அவன் ... இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். - மாற்கு 10:47


நம் ஆண்டவர் எருசலேமுக்கும் சிலுவைக்கும் போகின்ற பாதையில் சென்றுகொண்டிருந்தார். அந்த நெடுஞ்சாலையில் அவர் பஸ்காவுக்குப் போகின்ற திரள்கூட்டம் தம்மோடு வந்துகொண்டு இருக்கையில், எரிகோவில் நுழைந்தார். பர்திமேயு என்கின்ற குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான். பாலஸ்தீனாவிலே பிச்சைகேட்கின்ற குருடர்களை சாதாரணமாகப் பார்க்கலாம். இவர்கள் பட்டணங்களுக்கு அருகே உட்கார்ந்து காத்திருப்பதற்கு, அநேகர் பட்டணங்களுக்கு வருகை தருவதால் அவர்களிடம் பிச்சைகேட்கமுடியும் என்பதுதான் காரணம். இயேசு அவனைக் கடந்துபோகிறதை அறிந்த பர்திமேயு, இன்னும் உரத்த குரலில், இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று   கூப்பிட்டான். அவன் காசைக் கேட்க அல்ல, தான் குணமாக வேண்டுமென்றே கூப்பிட்டான்; அவ்வளவு நம்பிக்கையிழந்த நிலையில் இருந்தான் அவன். ஒவ்வொரு நாளிலும் அவன் முழுவதும் இருளான நிலையில் வாழ்ந்தான். அவனது உடனடி தேவை என்ன என்பதை அவன் உணர்ந்து, அதிக விசுவாசத்துடன் உலகின் ஒளியானவரை உரத்த சத்தத்துடன் கூப்பிட்டான். அதன் விளைவாக தன் பார்வையை மட்டுமல்ல, வாழ்வின் ஒளியையும் பெற்றான்! பிச்சைகேட்டுக்கொண்டிருந்தவனது குணமாக்குதல், நமக்காகத் தேவன் வைத்திருக்கின்ற அனைத்தையுமே நம்மால் பெற்றுக்கொள்ள முடியும் என்பதின் எடுத்துக்காட்டாக இருக்கிறது. இயேசு அவனிடம் சொன்ன வார்த்தைகளான, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்பதற்கு இரட்டை அர்த்தம் உண்டு. ஒரு கட்டத்தில், அவனுடைய சரீரத்தின் குறைபாடு இரட்சிப்படைந்ததால் இப்போது அவனால் பார்க்க முடிந்தது! ஆனால், ஆழமாய் சிந்தித்தால் அடுத்த கட்டத்தில் அவனது விசுவாசம் அவனுக்கு ஆவிக்குரிய இரட்சிப்பையும் தந்தது! இது மிகப் பெரிய அற்புதம்! நொடிப்பொழுதில் தேவன் அவனது பாவங்களை மன்னித்து, அவனுக்குப் புதுவாழ்வளித்து, அவனைத் தேவனுடைய பிள்ளையாய் மாற்றினார். 


  அன்பானவர்களே, எனக்கு இரங்கும் என்று பார்வையற்ற அந்த மனுஷன் மட்டுமல்ல, தினந்தோறும் நம் நினைவில், பேச்சில், செய்கையில் பாவம் செய்கின்ற நாமும் கூப்பிடவேண்டும். அந்தப் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த குருடனைப்போல நம்பிக்கையுடன் நாமும் தைரியமாய்க் கிருபாசனத்தண்டையில் சேருவோம்; அப்போதுதான் ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையையும் இரக்கத்தையும் நம்மால் அடையமுடியும். (எபிரெயர் 4:15-16)  

ஜெபம்: ஆண்டவரே, நானும் ஆவிக்குரிய விதத்தில் குருடனான பாவி; இரக்கத்தைப் பெற உம் கிருபாசனத்தண்டை வருவதுதான் எனக்கு ஒரே வழி. என் கூப்பிடுதலைக் கேட்டு எனக்கு ஒளியைத் தாரும். உம்மைக் கனம்பண்ணுகின்ற பெரிய விசுவாசத்தை எனக்குத் தந்து, முடியாததையும் பெற்றுக்கொள்ள உதவும்.  ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page