top of page

திங்கள், ஆகஸ்ட் 04 || ஆவியாலே தொடர்ந்து நிரப்பப்படுங்கள்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Aug 4
  • 1 min read

வாசிக்க: யோவான் 7: 37-39


.. மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து ... (எபேசியர் 5:18)


மதுபானம் அருந்தினவர்கள், ஆவியினால் நிரம்பினவர்கள் இருவருக்குமே பொதுவான காரியம் - அவர்கள் இருவருமே கட்டுப்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எவற்றால் நிரப்பப்படுகிறார்களோ அதன்படியே அவர்களது வாழ்க்கையும் குணாதிசயமும் இருக்கும். பழைய மனிதனின் அழுக்கான ஆடைகைளக் கழற்றி, மாம்சத்தின் தூண்டுதலால் வாழ்வதை நிறுத்தி, பரிசுத்த ஆவியால் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வை வாழுங்கள். அவருக்கு முழுவதும் கீழ்ப்படிந்து, அவர் வழிகாட்டுதலின்படி நடப்பது நமக்கு மிகவும் முக்கியம்! நாம் எப்படி இதைச் செய்யமுடியும்? அவரிடத்தில், சரி ஆண்டவரே என்று எப்போதும சொல்லவேண்டும். அதற்கான அர்த்தம்: ஆவியானவர் நம்மை ஒவ்வொரு நொடியும் கட்டுப்படுத்த விடுவது. மற்றும், நம் வாழ்வில் அவருடைய பிரசன்னம் தேவை என்பதை எப்போதும் உணர்ந்தவர்களாய், கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இருப்பதற்கு நம்மைப் பயிற்றுவிக்கவேண்டும்; நம் வாழ்வில் அவர் சித்தத்துக்குக் கீழ்ப்படிய நாம் விரும்பவேண்டும்.


பரிசுத்த ஆவியானவர் நம்மில் தங்குபவராக மட்டுமல்ல, அவர் நம்மை ஆளுகை செய்கிறவராகவும் இருக்கவேண்டும்.

நம்மில் நிலைத்திருப்பது மட்டுமல்ல, தலைமைதாங்குபவராயும் இருக்கவேண்டும்.

பரிசுத்த ஆவியானவர் செயல்படாதவராய் அல்ல, ஆதிக்கம் செலுத்துபவராயும்,

முக்கியமானவராயும் இருக்கவேண்டும்.

பரிசுத்தஆவியானவரிடம் நம்மை சமர்ப்பிக்கும்போது அவர் நம்மிலே கிறிஸ்துவின் வாழ்க்கையை வெளிப்படுத்துவார். அதாவது, ஒரு குடுவையை நிரப்புவதுபோல அவ்வப்போது அல்ல, ஒரு வீட்டின் சாவியை வேறு ஒருவரிடம் தருவது போல நம்மை அவரிடம் தரவேண்டும். பரிசுத்த ஆவியானவரால் நாம் நிரப்பப்படுவது தேவனுடைய கட்டளையாயிருக்கிறபடியால், தொடர்ச்சியாய் அவர் உங்களை நிரப்பாவிட்டால், நீங்கள் தேவ சித்தத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பீர்கள். எனவே,


அன்பானவர்களே, எது அல்லது யார் நம் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறார்கள்? ஒன்று, பரிசுத்த ஆவியானவராய் இருக்கவேண்டும் அல்லது மாம்சமாக இருக்கவேண்டும். சுயத்துக்கு நாம் மரித்தவர்களாய், பரிசுத்த ஆவியானவர்மேல் சார்ந்துகொள்ளுவோம்.

ஜெபம்: ஆண்டவரே, உமது ஆவியால் என்னை இப்போது நிரப்பும். என்னை முழுவதுமாக, வெள்ளம்போல் உமது தெய்வீக நதியால் நிரப்பும், பெலப்படுத்தும், மாம்சத்தை மேற்கொள்ள என்னை வல்லமைப்படுத்தும. பரிசுத்த ஆவியை நான் என்றென்றைக்கும் துக்கப்படுத்தாமலும், அவித்துப்போடாமலும் இருப்பேன். அவருடைய நடத்துதலுக்கு என்னை முழுவதும் சமர்ப்பிக்கிறேன். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page