ஞாயிறு, ஆகஸ்ட் 03 || உடைந்த பொருட்கள், உடைந்த இருதயங்கள்
- Honey Drops for Every Soul

- Aug 3
- 1 min read
வாசிக்க: சங்கீதம் 51: 1-17
... தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். - சங்கீதம் 51:17
நொறுங்குண்டவைகளைக் கர்த்தர் பயன்படுத்துகிறார். மரியாள் விலையுயர்ந்த தைலக்குப்பியை உடைத்து அதிலிருந்த தைலத்தை இயேசுவின் பாதத்தில் ஊற்றினாள், அவர் தலையை எண்ணையால் அபிஷேகம் பண்ணினாள். அவர் உடல் நமக்காக உடைக்கப்படப்போவதற்கு அடையாளமாக அப்பத்தை எடுத்துப் பிட்டார் இயேசு. நொறுங்குண்ட இருதயங்களைக் கர்த்தர் உபயோகப்படுத்துகிறார். அதுவே மனந்திரும்புதலுக்கு அடையாளம். பலிகளிலே கர்த்தர் பிரியப்படுவதில்லை. மாறாக, அவர் இருதயத்தைப் பார்த்து உன் நொறுங்குண்ட இருதயத்தை நான் குணமாக்குவேன் என்கிறார்.
தாவீது ராஜா, பத்சேபாளிடத்தில் விபச்சாரம் செய்ததை, பின்னர் அவளது கணவன் உரியாவைக் கொன்றதை இன்றைய வேதப்பகுதி விளக்குகிறது. ( 2 சாமுவேல் 1112) கர்த்தரைப் பிரியப்படுத்த பலவித பலிகளைக் கொண்டுவந்திருப்பான் தாவீது. ஆனால், அவன் அப்படிச் செய்து, தேவனிடத்திலிருந்து மன்னிப்பைப் பெற்றிருக்க முடியாது. தனது நொறுங்குண்ட இருதயத்தை தாவீது பலியாக கொடுக்கவேண்டுமென்று கர்த்தர் காத்துக்கொண்டிருந்தார். எனவேதான் தாவீது, தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் என்று கூறுகிறான். (சங்கீதம் 51:17) அவன் செய்த விபச்சாரமும், கொலையும் தாவீதுக்கு நியாயத்தீர்ப்பையும் மரணத்தையும் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனாலும் அவன் சாகவில்லை! ஏன்? காரணம், தேவனுடைய இரக்கத்தை உண்மையாய் அவன் தேடினான். அவன், தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும் என்று கெஞ்சினான். (சங்கீதம் 51:1) தன் கொடிய பாவங்களை மன்னிக்கின்ற வல்லமை தேவனுக்கு உண்டு என்று அவன் நம்பினான். தாவீதினது நொறுங்குண்ட இருதயத்தைக் கர்த்தர் பார்த்து, அவனை உள்ளும் புறமுமாக சுத்தம் செய்தார்.
அன்பானவர்களே, நம் கரங்களை அல்ல, இருதயங்களையே நோக்குகிறார் தேவன். நம் ஆன்மீக செயல்முறைகளில் அல்ல, நம் இருதயங்களில் உண்மை இருக்க தேவன் விரும்புகிறார். நமது நொறுங்குண்ட இருதயங்களை அவருக்குப் பலியாகத் தந்து அவரது இரக்கங்களை பெறுவோம். ஜெபம்: ஆண்டவரே, நான் உம்மைப் புண்படுத்தினேன் என ஒப்புக்கொள்கிறேன். என் செயலுக்காக அதிகம் வருந்துகிறேன். நான் செலுத்தும் பலிகளோ, ஆன்மீக செயல்களோ என் பாவத்தை எவ்விதத்திலும் சுத்தம் செய்யாது என்பதை உணர்கிறேன். என் நொறுங்குண்ட இருதயத்தையே உமக்குப் பலியாகக் கொண்டுவருகிறேன். என்மீது இரக்கம் காட்டி என்னை மன்னியும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments